tamilnadu

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடி

சென்னை, டிச.9 - தமிழ்நாட்டில் மொத்தம் 170 அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இக் கல்லூரி களில் பணிபுரியும் சுமார் 5000 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் அவசர  உயர்மட்டக் குழுக் கூட்டம் டிச.8 அன்று நடைபெற்றது.

இதில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் , மழை, வெள்ளம் காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு  முதலமைச்சர் உள் ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பணிகள் மனதார பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரி யர் கழகத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய ஒரு நாள் ஊதியம் சுமார் ரூ. 3 கோடியை தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப் பட்டதாக சங்கத்தின் பொதுச் செயலா ளர் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதே போன்று தலைமை செயலக  ஊழியர் சங்கமும் ஒருநாள் ஊதி யத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித் துள்ளது.