சென்னை, நவ.1- அரசாணை 95, 120ஐ ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.பெருமாள் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 வழிகாட்டலின் படி 10.3.2020க்கு பின் ஆசிரியர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் நிறுத்தி திரண்ட பணமாக (ரூ. 15,000, 20,000, 25,000) ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என அரசாணை 120 மூலம் முந்தைய அரசு அறிவித் துள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணா, கற்றல்கற்பித்தல் என்பது ஆசிரியர்களின் ஒரு தொடர் நிகழ்வு என்ற அடிப்படை யில் உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவித்து வழங்கப்பட்டு வந்தது. இன்றைய அரசு தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறிஞர் அண்ணாவால் கொண்டுவரப்பட்ட ஆசிரியருக் கான உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்குவோம் என கூறியது
மேலும் கடந்த ஜூலை மாதம் நடந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் ஆசிரியர் சங்கங் களின் சந்திப்பின்போது ஆசிரி யர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசு ஒரு படி மேலே சென்று தற்போது அரசாணை 95 மூலம் 10.3.2020க்கு முன்னும் அதற்கு பின்னும் உயர் கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் முற்றாக நிறுத்தி திரண்ட பணமாக ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. இது சமூக நீதிக்கு முரணானது.
மேலும் ஒரே தேதியில் உயர் கல்வி முடித்த ஒரு பகுதி ஆசிரியர் கள் உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் பெற்றிருக்கும் நிலையில் சுமார் 8,000 ஆசிரியர்கள் அதே தேதியில் உயர் கல்வியை முடித்த நிலையில் அவர்களுக்கு அந்த ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை. இது ஆசிரியர் நலனுக்கு எதிரானது. இது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை யும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது இதை தமிழ்நாடு முது நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
எனவே உடனடியாக இந்த அரசாணைகளை ரத்து செய்து ஆசிரியர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.