tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

குன்றத்தூரில் ஆட்சியர் நலத்திட்ட உதவி

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட, சோமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.68.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்வில் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை, ஜூலை 14 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 49 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, வாலாஜா வட்டம், அனந்தலை, பண்டித மாளவியா அரசு நிதியுதவி  நடுநிலைப் பள்ளியில்  காமராஜர் பிறந்த நாளில்  (ஜூலை 15) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைக்கவுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தில் 15 பள்ளிகளும், ஆற்காடு வட்டத்தில் 2 பள்ளிகளும்,  காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 3 பள்ளிகள், நெமிலி வட்டத்தில் 4 பள்ளிகளும், சோளிங்கர் வட்டத்தில் 9  பள்ளிகளும், திமிரி வட்டத்தில் 6 பள்ளிகளும், வாலாஜா வட்டத்தில் 10 பள்ளிகள் என மொத்தம் 49 அரசு நிதியுதவி  பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.

தணிக்கையாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணிப்பேட்டை, ஜூலை 14 -  மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு  சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்பு களின் தணிக்கைக்கு  விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் அரசு துறைகள் (அ) அரசு திட்டங்கள் (அ) தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் தணிக்கையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரத் திட்ட நடவடிக்கைகள் போன்றவற்றில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூலை. 19 முன்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்

நல்லூர்  சோதனைச்சாவடியில் லஞ்சம் வசூல்

கிருஷ்ணகிரி,ஜூலை14- ஒசூர் வட்டம், பாகலூர் சாலை மாநகராட்சி அலு வலகம் அருகே  நல்லூர் பிரி வில் போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில்  லஞ்சம் வசூல் செய்யப்படு வதாகவும், கொடுக்காத வாகன ஓட்டுநர்களை வேண்டுமென்றே 4 மணி நேரம் 8 மணி நேரம்,8 நாள் வரை கூட காக்க வைப்பதாகவும், மிரட்டு வதாகவும் கிடைத்த தகவ லின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திடீர் சோதனை நடை பெற்றது. அதில் கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.