tamilnadu

img

பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விட்டால் உரிமையாளர், குத்தகைதாரர் மீது குற்றவியல் வழக்கு

விருதுநகர், ஜன.25- பட்டாசு தொழிற்சாலைகளை விதி முறைகளை மீறி  குத்தகைக்கு விடுவது  கண்டறியப்பட்டால், உரிமையாளர்கள் மற்றும் குத்தகைக்கு எடுத்தவர்கள் மீது கடுமையான குற்றவியல் நட வடிக்கைகள் எடுக்கப்படும் என விரு துநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘விருதுநகர் மாவட்டத் தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சமீ பத்தில் விபத்துகள் தொடர்ந்து நடை பெற்று உயிர் சேதம், பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சாத்தூர் அருகே தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் கலா ராணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் அறையில், மீனம்பட்டி யைச் சேர்ந்த அஜித் (23) என்பவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துள் ளார். அப்போது  வெடி விபத்து ஏற்பட்ட தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக நில உரிமையாளர் மீது  குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் அனுமதி பெறாத இடங்களில் பட்டாசுகள் மற்றும் கருந்திரி தயாரிப் பது கண்டறியப்பட்டால், தயாரிப் பவர்கள் மற்றும் இடத்தின் உரிமை யாளர்கள் மீதும் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், பட்டாசு ஆலைகளை, விதி முறைகளை மீறி வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடுவது தெரிய வந்தால், உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆகி யோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக இரத்து செய்யப்படும். மேலும், உரி மங்கள் பெறுவதிலிருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட சட்டரீதியான நட வடிக்கைகள் எடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில்  ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி சாலையில் உள்ளது தமிழ்நாடு உணவகம். இதன் அருகே உள்ள கட்டிடத்தில் அரசு  அனுமதியின்றி, சட்டவிரோதமாக சிலர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள னர். இந்நிலையில், பட்டாசுக்கான வேதிப் பொருட்களை செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு, திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்  கட்டிடம் முழுவதும் வெடித்து தரை மட்டமானது. இதில் மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (23) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதனன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கிருந்த 3 அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின.  

இந்த விபத்தில், வேதிப் பொருட்கள் கலக்கும் அறையில் பணிபுரிந்த கன்னிச்சேரியைச் சேர்ந்த காளிராஜ் (23), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

கன்னிசேரி புதூரைச் சேர்ந்த ஆலை போர்மேன் சரவணக்குமார் (24), இனாம் ரெட்டிய பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகிய இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலை யில், படுகாயமடைந்த ஆலை போர்மேன் சரவணக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு வேதிப் பொருட்கள் மீது தீப்பொறி
விழுந்து வெடி விபத்து : ஒருவர் படுகாயம்

விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது வீட்டில் அனுமதியின்றி சரவெடி தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள் இருந்துள்ளது. மேலும் அவருடைய வீட்டில் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜூ. இவர் வேலி அமைப்பதற்காக இயந்திரம் மூலம் கம்பிகளை வெட்டியுள்ளார்.

அப்போது, அதிலிருந்து வெளியான தீப்பொறிகள், எதிர்பாராத விதமாக, பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வேதிப் பொருட்கள் மீது விழுந்துள்ளது. இதனால், கண் இமைக்கும் நேரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது.

  இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல் துறையினர் படுகாயமடைந்த சின்னராஜூவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.