சென்னை, மார்ச் 16 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதி வாளர், அனைத்து கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்ற றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் பி.எட் மாணவர்களின் வாக்காளர் எண்களை சேகரிக்க ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. எனவே, அனைத்து கல்லூரி முதல்வர்களும், மார்ச் 19ஆம் தேதிக்குள் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கையை பல்கலைக் கழ கத்தின் பதிவாளர் திரும்பப் பெற்றார். இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆளுநர் மாளிகைக்கு எதற்கு மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்? எல்லை மீறும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.