கோவை, ஜூலை 12- கோவை மாநகராட்சிக்குட்பட்ட 3,000 வீடுகளின் கழிவு நீர் குழாய்கள் முதற்கட்டமாக பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. கோவை மாநகராட்சியில் உள்ள 40,000 வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக் கடை திட்டத்தில் இணைக்கப்படும் வீடுகளின் கழிவுகள் உக்கடத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆணையத்தில் சுத்திகரிப்பிற்காக அனுப்பப்படுகிறது. இத்திட்டப் பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்தப் பணிகளை துரிதமாக செய்து முடிப்பதற்காக கோவை மாநகராட்சியின் சார்பில் 3 பொறியாளர்கள் நிய மிக்கப்பட்டு, மேற்பார்வை செய்து வருகின்றனர். முதற்கட் டமாக உக்கடம் உள்பட மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 3,000 வீடுகளின் கழிவுகள் உக்கடம் கழிவு நீர் குழாய்க்கு நேரிடையாக சென்றடையும் வகையில், பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.