சென்னை, ஜன. 10 - 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க கோரி புத னன்று (ஜன.10) சென்னை யில் கூட்டுறவு வங்கிகள் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உரு வாக்க வேண்டும். நகர கூட்டு றவு வங்கிகளின் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும். கூட்டுறவு ஊழியர்க ளுக்கு வழங்கப்படாமல் உள்ள 10 விழுக்காடு போனஸ் நிலுவை வழங்க வேண்டும். ஊழியர் கடன் களுக்கான வட்டி விகிதம் 0.5 விழுக்காடு உயர்த்தி யதை ரத்து செய்ய வேண் டும்.
8 ஆண்டுகளாக பணி யில் சேர்ந்தவர்களுக்கு முது நிலைப் பட்டியல் வெளி யிட வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதலுக்கு மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோருக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும், ஊழி யர்கள் பெற்றுவரும் உரிமை கள், சலுகைகள் தொடர் வதை, ஊதிய உயர்வு சுற்றறிக்கையில் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் இந்த தர்ணாவை நடத்தியது.
இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், “கேரளாவை போன்று பலம்பொருந்திய தமிழ்நாடு வங்கியை அரசு உருவாக்க வேண்டும். அதிகாரிகள் ஆலோசனைப்படி செயல் படாமல், பெற்றோர் களை போல் அரசு செயல்பட வேண்டும். ஊழியர் நலனில் இருந்து அரசு சிந்திக்க வேண்டும்” என்றார். வேலைநிறுத்தப் போராட் டத்திற்கு தலைமை தாங்கி பேசிய சம்மேளன தலை வர் தி.தமிழரசு, ஊழியர்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி ஜன.23, 24 தேதிகளில் வேலை நிறுத்தம் நடை பெறும் என்றார்.
இந்தப் போராட்டத்தில், சம்மேளன பொதுச் செய லாளர் இ.சர்வேசன், பெபி பொதுச் செயலாளர் டி.ரவிக் குமார், துணை தலைவர் என்.ராஜகோபால் உள்ளிட் டோர் பேசினர்.