சைதாப்பேட்டை இந்தியன் வங்கிக் கிளை சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு புதனன்று (ஆக. 21) நடைபெற்றது. வங்கியின் உதவி பொது மேலாளர் எஸ்.கணேசன் வரவேற்றார். சென்னை தெற்கு மண்டல மேலாளர் பி.சுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார். நிர்வாக இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். வங்கியின் உதவி கிளை மேலாளர் பிரசன்ன சங்கர் நன்றி கூறினார். இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.