தமிழ்நாடு அரசுக்கு சொந்த மான பொதுத்துறை நிறுவனங்க ளில் பணிபுரியும் தொழிலாளர் மற் றும் ஊழியர்களுக்கு தீபாவளியை யொட்டி 2022-23 ஆம் ஆண்டுக் கான போனஸ் குறித்து முதல மைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் அரசு போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளைஸ் உள் ளிட்ட நிறுவனங்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படு வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 10 விழுக்காடு மட்டுமே வழங் கப்படும் என்ற செய்தி ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கடந்த 3.11.2023 அன்று, துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி டாஸ்மாக் நிறு வனத்தில் செயல்படும் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு சங்கமும் தாங்கள் முன்வைத்த போனஸ் கோரிக்கை குறித்து எடுத்துரைத்தன.
மாநில பொதுத்துறை நிறு வனங்களில் பெரிய நிறுவனங்க ளாக உள்ள அரசுப் போக்குவரத்து, மின்சாரம் போன்றவைகளுக்கு வழங்கப்படும் போனஸ் அளவிற்கு குறையாமல் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் ஒத்தக் கருத்துடன் வலியுறுத்தின.
வார்த்தையில் முன்னுக்கு வந்த கருத்துக்கள் அடிப்படையில் அர சின் கவனத்திற்கு கொண்டு செல்கி றேன், நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் உறுதியளித்திருந்தார்,
இந்த நிலையில் நவம்பர் 9 அன்று முதலமைச்சர், டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் (8.33 + 11.67) வழங்கப்படும் என்று அறிவித்துள் ளார். இந்த அறிவிப்பானது ஊழி யர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழி யர் மாநில சம்மேளனம் சார்பில் இந்த அறிவிப்பை வரவேற்கி றோம்.
மாநில பொதுத்துறை நிறுவ னங்களில் வேறு எந்த நிறுவனத்தி லும் போனசுக்கான பேச்சு வார்த்தை நடைபெறாத நிலை யில், ஊழியர்களின் மன நிலை யை அறிந்து கொண்டு தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய துறை அமைச்சருக்கும் இதற்கென தனிக்கவனம் செலுத் திய மேலாண்மை இயக்குநருக் கும் 20 விழுக்காடு போனஸ் வழங்க நடவடிக்கை எடுத்த துறையின் முதன்மை செயலாளருக்கும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னத்தின் சார்பில் வாழ்த்துக்களை யும், பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த ஆண்டிலி ருந்து டாஸ்மாக் ஊழியர்கள் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்க ளில் குடும்பத்தினருக்கு துணி மணிகள் வாங்குவதற்கு பண்டி கைக் கால துணிக் கடனை நடை முறைப்படுத்தியமைக்கும் சம் மேளனம் பாராட்டுகளை தெரி வித்துக்கொள்கிறது.