திருவள்ளூர், ஜூன் 14 ஆலை மூடலை தடுத்து நிறுத்த போராடிய சிஐடியூ காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் சிறையில் அடைத்ததை கண்டித்தும், அசாத் தொழி லாளர்கள் போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணக்கோரியும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்ட த்தில் சிகால், பிஜிஆர் ஆகிய தொழிற்சாலைகளில் பணி நீக்கம் செய்துள்ள 40 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தொழிற்சாலைக ளின் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசும், தொழி லாளர் துறையும் தலையிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொது தொழிலாளர் சங்கத்தின் சோழவரம் ஒன்றிய தலைவர் ஏ.நடரா ஜன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜ யன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் எஸ். ஏ.கலாம் உட்பட பலர் பேசினர். பாலாஜி நன்றி கூறினார்.