tamilnadu

img

தாய்த் தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும்

சென்னை, பிப். 5- ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களின் தாய் மண்ணான தமிழ்நாட் டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில்  உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்க ளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற் கொள்ள வலியுறுத்தி வருகிறார்.  

அதோடு, பல்வேறு முன்னணி  நிறுவனங்களுடன் புரிந்துணர்வு  ஒப்பந்தங்களும் மேற்கொள்ள பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்பெயி னில் நடைபெற்ற “ஸ்பெயின் தமிழர்க ளுடன் முதல்வர்” எனும் நிகழ்ச்சியில்  அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகையில் “உங்க ளின் தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது பேசிய அவர், கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய்  மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால்  முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள், செய்யப் போகிறீர்கள், செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக் கிறோம்.

அது தமிழ்நாட்டிற்கு மட்டு மல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக் ்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக் கும் உங்களுக்கும் அது பெருமைதான் என்று முதலமைச்சர் தெரிவித்தார். இதில் தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல மைச்சரின் செயலாளர் பு.உமாநாத், ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.