tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களை பாராட்டிய முதல்வர்

சென்னை, டிச.12- தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத  பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த  இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப் பட்டு வருவதுடன், சீரமைப்பு பணி களை போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய்  உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்பட்டதுடன், மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கன மழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சியில், கூடுவாஞ்சேரி, மறை மலைநகர், பொன்னேரி, திருநின்ற வூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய  நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கி  உள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்  கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல் வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, செங்கல்பட்டு,  ஆகிய மாவட்டங்களில் இருந்து 3449  தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட  பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்ட னர்.

புயல் மற்றும் கனமழையை  தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கி இருந்த குப்பை மற்றும் தோட்டக் கழிவு களை அகற்றி சுத்தம் செய்திடும் வகையில், திருநெல்வேலி மண்டலத்தில் 173 நபர்கள், மதுரை மண்டலத்தில் 287 நபர்கள்.

தஞ்சாவூர் மண்டலத்தில் 185 நபர்கள், வேலூர் மண்டலத்தில் 396 நபர்கள், வேலூர் மாநகராட்சியில் 107 நபர்கள், சேலம் மண்டலத்தில் 91 நபர்கள், சேலம் மாநகராட்சியில் 220 நபர்கள், திருப்பூர் மண்டலத்தில் 225 நபர்கள், திருப்பூர் மாநகராட்சியில் 133 நபர்கள்.

செங்கல்பட்டு மண்டலத்தில் 4 நபர்கள், கோவை மாநகராட்சியில் 414 நபர்கள், ஈரோடு மாநகராட்சியில் 113 நபர்கள், திருச்சி மாநகராட்சியில் 260 நபர்கள் என மொத்தம் 2,608 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகர் முழுமைக்கும் இதுவரைக்கும் 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவ.30 முதல் டிச.10 வரை 162 நிவாரண முகாம்களில் 1,35,681 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். நிவா ரண மையங்களில் தங்கிய பொது மக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலைகளுக்கு 49,59,351 உண வுப் பொட்டலங்கள் வழங்கப்பட் டுள்ளன.

கனமழையால் ஏற்பட்ட குப்பை கள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்ற தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.

கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வந்து குப்பைகளை அகற்றி டும் பணிகளை மேற்கொண்ட 3449  தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் தமிழ்நாடு முதல மைச்சரால் பாராட்டி ஊக்கத் தொகை யும், பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று (டிச.12) பெரு நகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கன மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை  மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணி யாளர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.