tamilnadu

img

எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, டிச.11- 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டலான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

ஈரோடு மாவட்டம், கஸ்பாப் பேட்டை கிராமத்தில் , 1957 டிசம்பர்  30 அன்று பிறந்தவர் தேவிபாரதி. அவரின் இயற்பெயர் ராஜ சேகரன். அவர் தனது சொந்த ஊரில்  உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்புவரை படித்துள்ளார்.

அதன்பிறகு பல நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைப்படக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். குறிப்பாக தேவிபாரதியின் சிறுகதைகளில் காந்தியை பற்றிய “பிறகொரு இரவு” போன்றவை கவனிக்கப்பட்ட படைப்பாக உள்ளது. மேலும், அரசியல் கட்டுரைகளும், நெடுக்கடி நிலை மற்றும் இடதுசாரி இயக்கங்க ளில் செயல்பட்டதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் எழுதி யிருக்கிறார்.

எழுத்தாளர் தேவபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை களில் ஒன்று தன்னறம். இந்த சிறுகதை 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பலரின் வரவேற்பை பெற்றது. பலி, கண் விழுத்த மறுநாள், மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும் போன்ற பல சிறு கதைகளை படைத்துள்ளார்.

புழுதிக்குள் சில சித்திரங்கள் (அரசியல் கட்டுரை), அற்ற குளத்து அற்புத மீன்கள், சினிமா  பாரடைஸோ (திரைப்படக் கட்டுரை) போன்ற கட்டுரைக களையும், நிழலின் தனிமை,  நட்ராஜ் மகராஜ், நீர்வழிப்படூஉம், நொய்யல் போன்ற நாவல் களையும் எழுதி உள்ளார்.

இவரின் அற்புதமான படைப் புகளுக்காக ஜெயந்தன் விருது, அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி தன்னறம் விருது 2022  போன்ற விருதுகளைப் பெற்றுள் ளார். 

இதையடுத்து, எழுத்தாளர் தேவிபாரதியின் “நீர்வழிப்படூஉம்” தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் தேவி பாரதிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்ற னர். எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.