tamilnadu

பத்திரிகையாளர் ஷபீர் அகமது மீது அவதூறு

சென்னை, டிச. 9 - பத்திரிகையாளர் ஷபீர் அகமது  மீது அவதூறு பரப்பி, அச்சுறுத்து வோர் மீது முதலமைச்சர் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் பாதிப்புகளை பதிவு  செய்து, மக்களின் துன்ப துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று  நிவாரணம்  கிடைக்கச் செய்வது பத்திரி கையாளர்களின் கடமை. வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து பதிவு செய்து  வரும் ‘தி நியூஸ் மினிட்’ டிஜிட்டல்  ஊடகத்தை சேர்ந்த ஷபீர் அகமது வுக்கு எதிராக, சமூக ஊடகங்களில்  திமுக பெயரில் இயங்கும் சிலர் அவதூறு பரப்பி, அச்சுறுத்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்ற னர். இதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித் துள்ளன.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில், புயல் வெள்ள பாதிப்புகள், மக்களின்  தேவைகளை சேகரித்து செய்தி யாளர்கள் வெளியிடுகின்றனர். இதை,  அரசு செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் என்ற வகை யில் எடுத்துக் கொண்டு தீர்வுகளை தருவதே முறையானது. இதற்கு மாறாக, இணையவெளியில் திமுக வின் தகவல் தொழில்நுட்ப அணி என்ற அடையாளத்துடன் திரியும் சிலர்  பத்திரிகையாளர்கள் மீது நடத்தும் அருவருப்பான தாக்குதல் தமிழ் நாட்டிற்கே இழுக்கு. பத்திரிகை யாளர்களை கடமையை செய்ய  விடாமல் அச்சுறுத்தும் கீழ் மதியினரை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது. 

சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்யுஜெ) விடுத்துள்ள அறிக்கை யில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியாமல் தடுப்பது கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானதாகும். எனவே ஷபீர் அகமது  மீது அவதூறு பரப்பி, அச்சுறுத்துவோர் மீது கட்சி ரீதியாகவும் சட்டப்படியும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், எக்ஸ் தளத்தின் வாயிலாக வெளிப்படையாக விடப்பட்டுள்ள மிரட்டல் பத்திரிகையாளர்களின் பணியை கொச்சைப்படுத்துவதுடன், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. இதில் தொடர்புடையோர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் முதல மைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.