சென்னை, மார்ச் 14 - போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் கைது செய் யப்பட்டது தொடர்பாக கடந்த மார்ச் 8 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புப்படுத்தி பேசியிருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இவர்களின் கருத்து உள்ளதாகவும், இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் முக. ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.