சென்னை, ஜன.9 - சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டி இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதி நிலைநாட்டப்பட்டது இந்த தீர்ப்பை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள் ளார். அதில்,“சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப் பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. வெளிச்சம் போடும் தீர்ப்பு குஜராத் மாநில பாஜக அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளி களுக்கு உடந்தையாக இருந்திருக் கிறது என்று உச்சநீதிமன்றம் இடித் துரைத்திருப்பது, அரசியல் லாபங் களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கி றது.
தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பாஜக ஆட்சி யாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்ட கால சிறைவாசிகளை நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதி யும் சட்டப்பூர்வமாக முன்விடுதலை செய் யும் முயற்சி களுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. “நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற் றியது போன்ற உணர்வை பெறுகிறேன்.
இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன. நீதி கேட்டு அவர் நடத்திய நெடும் பயணத்துக்கு கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக் கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியும் தருவதாகும். அஞ்சாமல் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.