tamilnadu

img

தேவநேயப் பாவாணருக்கு முதல்வர் புகழாரம்

சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த் துச் செய்தியில் கூறியிருப்பதாவது:  தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர் திரா விட மொழிநூல் ஞாயிறு தேவ நேயப் பாவாணர்.  தமிழின் உண்மையான இயல் பையும் வரலாற்றையும் அறிந்து தமிழி லும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்து தல் வேண்டும் என நம் பணிகளுக்கு  வழிகாட்டிய தமிழுணர்வாளர். தமிழ்  வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர்  மதம், தமிழர் திருமணம், திருக்குறள்  உரை எனத் தமிழின் தனிச்சிறப்பை  நிறுவ தனிமனிதப் பல்கலைக்கழக மாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.