tamilnadu

img

தலைமை தேர்தல் அதிகாரி வாக்குப்பதிவு

சென்னை, ஏப். 18- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு சென்னை நெற்குன்றத் தில் தனது வாக்கினை பதிவு செய்தார். திருபெரும்பதூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாகவும், எந்திர கோளாறு குறித்து புகார் வந்த பகுதிகளில் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சென்று சரி செய்து வருகின்றனர் எனவும் கூறினார்.

;