அரியலூர், மார்ச் 27- சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் தனது வேட்புமனுவை புதனன்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரு மான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தாக்கல் செய்தார்.
அவருடன் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பின்பு, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், “இன்று வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறேன். மார்ச் 30 அன்று சின்னம் ஒதுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் உடனடியாக சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி களுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை சின்னம் ஒதுக்கவில்லை அல்லது நிராக ரிக்கிறது. தேர்தல் ஆணையமே ஒருதலைப் பட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக் கிறது. நேர்மையோடு இத்தேர்தலை நடத்தி னால்தான், ஜனநாயகம் காக்கப்படும். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக் கூடாது.
தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும். தமிழக முழுவதும் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று”என்றார்.