tamilnadu

img

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில் விலகினாலும், தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கில் வருகிற 26 ஆம் தேதி வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.    
 

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 33 செ.மீட்டர் இயல்பாக பெய்ய வேண்டும்.

இந்த ஆண்டு இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று அவர் கூறினார்.

;