புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் ஒரேநாளில் 10,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன என்று மாநகர ஆனையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் 2 நாட்களில் 60 விழுக்காடு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. புயலின் போது பெய்த அதி கனமழையால் சென்னையில் 67 டிஎம்சி தண்ணீர் வந்திருக்கக்கூடும். அதிக மழை பொழிந்த நிலையில் கடல் தண்ணீரை உள்வாங்காததால் வெள்ளம் ஏற்பட்டது,”என்றும் அவர் கூறினார்.