பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் காவல்துறை முன் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் அவதூறாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது எஸ்.வி.சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.