மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அண்ணாநகர் பணிமனை இடைக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் தனது 31 ஆண்டுகால போக்குவரத்து ஊழியர் பணியை நிறைவு செய்வதையொட்டி தீக்கதிர் நாளிதழுக்கு ரூ.3 ஆயிரத்தையும் அயன்புரம் நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரத்தையும் நன்கொடையாக வழங்கினார். உடன் மாநகரபோக்குவரத்துச் செயலாளர் தயானந்தன், சிஐடியு தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் எம்.சந்திரன், பணிமனைத்தலைவர் அஜித்தாஸ், இடைக்குழு உறுப்பினர் பி.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.