சென்னை, ஜூன் 2- ஆறு ஆண்டுகளுக்கு முன் அறி விக்கப்பட்ட சென்னை விமான நிலைய துணை முனையம் திட்டத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், இந்தியா வில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு முனையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு 30 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பன்னாட்டு முனையம் அமைக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன்பு விமான இயக்கம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படி யாக உயர்ந்தது.இதன் காரணமாக சென்னையில் செயற்கைக்கோள் முனைய திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நிலம் கைய கப்படுத்துதல், தளவாடங்கள் உள்ளிட்ட பணிகள் கடினமாக இருந்த தால் அப்போது இந்த திட்டத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கைவிட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
தற்போது விமான நிலையத்தின் ஏர்சைட் பகுதியில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கும் விமானங்களை இயக்கும் வகையில் துணை முனையத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணை யம் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலையங் களின் ஆணைய அதிகாரிகள் கூறியிரு ப்பதாவது: இந்த துணை முனையத்தை உருவாக்க ஒரு பெரிய நிலம் தேவை என்பது தெளிவாக உள்ளது. இந்த துணை முனையம் மற்றும் அணுகு சாலைகள் இணைப்பு போன்றவற்றிற்கு நிலத்தின் தேவை தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏஏஐ மற்றும் TIDCO இடையே யான கூட்டத்தில் செயற்கைக்கோள் முனையத்திற்காக கையகப்படுத் தப்படும் நிலங்களுக்கு அதிக விலை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தை ஏஏஐ கைவிட விரும்பாததால் தற்போது இந்த திட்டத்தில் தாம்பரம் மற்றும் மதுர வாயில் ஆகியவற்றை தண்டலம் மற்றும் கெருகம்பாக்கம் வழியாக இணைக்கும் உயர்த்தப்பட்ட தாழ் வாரத்தை அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கைக்கோள் முனையத்தின் நுழைவு புள்ளி வரை பயணிகள் நேரடி யாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேலும் இப்போது நாங்கள் திட்ட மிடும் உயரமான இந்த தாழ்வாரத் தில் பெரிய அளவில் நிலம் கையகப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்த தாழ்வாரத்தை அமைப்ப தற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும், இந்த தாழ்வாரம் எந்த இடத்தில் தொடங்கும் எங்கு முடிவடை யும் போன்ற பிற அம்சங்களை பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெறும் என்றும், குறிப்பாக இந்த உயர்த்தப்பட்ட தாழ்வாரம் அடையாறு ஆற்றின் குறுக்கே செல்லும் என்பதால் நீர்வளத் துறை மற்றும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.