tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய சிபிவிசி குழாய்கள் அறிமுகம்  
சென்னை, ஜூன் 11 சாதாரண பிவிசி குழாய்களை விட அதிக வெப்பம் தாங்கக்கூடிய சிபிவிசி குழாய்களை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குளோரினேட்டட் பாலிவினைல் குளோரைடு என்ற அழைக்கப்படும் இத்தகைய குழாய்கள் கடந்தாண்டு முதலில் மதுரை, தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து திருச்சி, கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய ரோக்கா நிறுவன மேலாண் இயக்குநர் கே.வி.ரங்கநாதன் கூறினார். வரும் ஆண்டுகளில் இதன் சந்தை மதிப்பை 30 விழுக்காடு கைப்பற்ற ரோக்கா இலக்கு நிர்ணயித்துள்ள தாக கூறிய அவர், ஆரம்பத்தில் சிபிவிசி குழாய்களுக்கு போதிய வரவேற்பு இல்லை என்றும் இருப்பு வைக்க 4 கிடங்கு களை மட்டுமே திறந்தோம். ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கருத்துக்களின் அடிப்படையில் உற்பத்தியை இருமடங்காக அதிகரித்தோம் என்றார்.  கடந்த நான்குமாதங்களில் மதுரையில்மட்டும் 10விழுக்காடு சந்தையை கைப்பற்றியுள்ளோம். சென்னை யில் 30விழுக்காடு சந்தையை கைப்பற்ற இலக்கு நிர்ண யித்துள்ளோம்.விரைவில் மற்ற தென்னிந்திய நகரங்களிலும் பின்னர் படிப்படியாக தேசிய அளவிலும் இந்த புதிய குழாய்களை அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார் ரங்க நாதன்.

புதிய பிரிண்ட்டிங் சாதனம் சென்னையில் அறிமுகம் 
சென்னை, ஜூன் 11- டிஜிட்டல் பிரின்டிங் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய பிரின்டிங் சாதனத்தை கேனன் இந்தியா சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இமேஜ் பிரஸ் சி 10000விபி என்று பெயரில் வந்துள்ள இந்த பிரிண்டிங் சாதனத்தை வடபழனி அம்பிகா அச்சகத்தில் கேனன் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் புனீத்தத்தா அறிமுகம் செய்து வைத்தார். தென்னிந்தியாவில் அச்சுப்பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் இதுபோன்ற நவீன சாதனங்கள் அந்த தொழிலின் தன்மையை மேம்படுத்துவதோடு தெளிவான படங்ங்களை அச்சிடவும் உதவும் என்று அவர் கூறினார்.  ஒரு நிமிடத்திற்கு 100 பிரிண்ட் எடுக்கும் வகையில் இதன் வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப பல தொழில்நுட்ப வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. சிறுவணிகங்கள் துளிர்க்கும் இடமான சென்னையில் டிஜிட்டல் பிரிண்ட் வணிகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த புதிய சாதனம் மூலம் எங்களுக்கும் அச்சகங்களுக்கு இடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.