உலக மக்கள் தொகை தினம் அனுசரிப்பு
செங்கல்பட்டு,ஜூலை 4- ஐ.நா. சபை, 1989 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அங்கீகரித்து அனுசரித்து வருகிறது. அதன்படி 30ஆவது உலக மக்கள் தொகை தின அனுசரிப்பு நிகழ்வு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர்மருத்துவர் உஷா சதாசிவன், துணை முதல்வர் அனிதா, காஞ்சிபுர மாவட்ட குடும்ப நலத் துறை இணை இயக்குநர் ஜீவா, குடும்ப நல பணிகள் துணை இயக்குநர் மணிமேகலை, ஆகியோர் கலந்து கொண்டு, ‘ மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை தடுத்தல் போன்ற குடும்ப நல செய்திகளை அனை வருக்கும் எடுத்துக் கூறுவ துன், அனைவரும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என பேசினர். நிகழ்ச்சியில் வில்லு ப்பாட்டு மூலம் உலக மக்கள் தொகையால் ஏற்பாடும் பாதிப்புகளையும், குழந்தை பிறப்பை குறைக்கும் வகையிலும் விளக்க ப்பட்டது.
மருந்து சேவைக்காக மாணவர்கள் உருவாக்கிய புதிய செயலி
சென்னை, ஜூலை 4 மருந்து சேவைக்காக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன முன்னாள் மாணவர்கள் அமைப்பு சென்னையை சேர்ந்த சுகாதார பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான தீவிதா டெக்னாலாஜியுடன் இணைந்து`பெப்பில்' என்னும் புதிய மென்பொருள் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த மென்பொருள் மேகக்கணினி அடிப்படையில் செயல்படும். இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மருந்தகங்களுக்கான சேவை கள் அனைத்தை வழங்கும். அதிகப்படியான வாடிக்கை யாளர்கள் மற்றும் வணிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இது பயன்படும். இந்த பெப்பில் செயலி பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள மருந்தகங்க ளில் மருந்துகளை பெறலாம். இதன் மூலம் பணம் செலுத்தலாம். மேலும் அவர்கள் எப்போது மருந்துகளை வாங்க வேண்டும் என்பது குறித்தும் இந்த செயலி அவர்களுக்கு நினைவூட்டும் என்று தீவிதா டெக்னாலஜிஸ் தலைமைச் செயல் அதிகாரி பழனி பெருமாள் தெரி வித்துள்ளார்.
சென்னையில் புதிய வீட்டுவசதி திட்டங்கள் 50விழுக்காடு சரிவு
சென்னை, ஜூலை 4 நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் சென்னையில் புதிய வீட்டுவசதி திட்டங்களை துவக்குவதில் 50 விழுக்காடு சரிவு காணப்படுகிறது. தரைதள பரப்பளவு குறியீட்டை அதிகரித்து அரசு அறிவிக்கை வெளியிட்ட பின்னரும் புதிய திட்டங்களை துவங்குவதில் கட்டுமான நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் உள்ளன.சென்னையில் உள்ள வீட்டுவசதி மற்றும் அலுவலக பயன்பாடு குறித்து ஜெஎல்எல் தேசிய அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொண்டுள்ள வீட்டு வசதி திட்டங்களை முடிப்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவதாகவும் சென்னையில் இந்த அறிக்கையை வெளியிட்ட ஜெஎல்எல் மேலாண் இயக்குநர் சிவ கிருஷ்ணன் கூறினார். நாவலூர், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் பெரும்பாலான கட்டுமான திட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் விற்பனையாகும் மொத்த வீடுகளில் 57 விழுக்காடு தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளாக உள்ளன.கிண்டி, மவுண்ட் பூந்தமல்லி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம்- துரைபாக்கம் சாலை ஆகிய இடங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகமான வீட்டு வசதி திட்டங்களை கொண்டுள்ள பகுதிகளாக வளர்ந்து வருகின்றன.சாலை வசதி மற்றும் இதர தொடர்பு வசதிகள் இங்கு நன்றாக உள்ளதால் இப்பகுதியை பொதுமக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
பெண்களை அங்கீகரிக்க சுயசக்தி விருதுகள்
சென்னை, ஜூலை 4 வேளாண்மை, கலை, கலாச்சாரம், அழகு, ஆரோக்கியம், கல்வி, உணவு, பானங்கள், வீட்டு வல்லுநர்கள், உடல் நலம், வீட்டு சில்லறை விற்பனை, ஊடக பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்தகுதி மற்றும் சமூக நலன் ஆகியவற்றின் சிறந்து விளங்கும் பெண்களையும் வீடுகளில் இருந்து தொழில்க ளில் ஈடுபட்டு வெற்றிபெற்ற தொழில்முனைவோரையும் அங்கீகரிக்கும் வகையில் பெண் சுயசக்தி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விருதுக்குரிய நபர்களை டாக்டர் மரியா சீனா ஜான்சன் (சத்யபாமா பல்கலைக் கழகம்) வீணா குமாரவேல் (பெண் தொழில்முனைவோர்) ரோ ஹினி மணியன், அருணா சுப்பிரமணியம் (அறங்காவ லர் பூமிகா அறக்கட்டளை) டாக்டர்சௌந்தர்யாராஜேஷ் ( அவதார் தொழில் படைப்பாளர்கள்) சுசிலா ரவீந்திரநாத் (பத்திரிகை யாளர்) லதாராஜன்( மாஃபோய் பவுண்டேசன்) உள்ளிட்ட நடுவர் குழு தேர்வு செய்ய உள்ளது. பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதியாக 90 க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிராண்ட் அவதாரின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமச்சந்திரன் கூறி யுள்ளார்.