tamilnadu

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

சென்னை:
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஞாயிறன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவு:

ஆயுதப்படை போலீஸ் (சென்னை) ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். சென்னை பெருநகரகாவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ் மூர்த்தி, காலியாக உள்ள தலைமையிட ஐஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார்.சட்டம் - ஒழுங்கு (திருநெல்வேலி) துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், காவலர் தேர்வு பள்ளியின் (பேரூரணி, தூத்துக்குடி) எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ் குமார், சட்டம் - ஒழுங்கு (திருநெல்வேலி) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.காவலர் தேர்வு பள்ளியின் (பேரூரணி, தூத்துக்குடி) எஸ்.பி-யாக இருந்த எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் (பூந்தமல்லி, சென்னை) கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;