tamilnadu

தமிழகத்தில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்....

சென்னை:
தமிழக காவல்துறையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 26 காவல் கண் காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஆர்.பொன்னி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல் கண்காணிப்பாளராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக கிங்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையக ஏ.ஐ.ஜி.யாக எம்.துரை நியமனம்செய்யப்பட்டுள்ளார்.மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளராக பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப் பாளராக இருந்த சண்முகப்பிரியா சென்னையில் செயல்படக் கூடிய சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக சுஜித்குமார், மனித உரிமைகள் ஆணையத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நுண்ணறிவு பிரிவினுடைய மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்கண்காணிப்பாளராக அசோக்குமாரும், குற்றப்புலனாய்வு மதுரை மண்டல பிரிவு காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சத்தி ரயில்வே காவல் கண்காணிப் பாளராக அதிவீர ராம பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவலர் நலப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக ஜி.சம்பத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

;