districts

கழிவறையை சுத்தம் செய்த மாணவி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம், மார்ச் 30 - உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவியை கொண்டு பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவி  சுத்தம் செய்யும் வீடியோ   சமுக  வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி வைத்து  கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவ சொன்னார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது  குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தர விட்டிருந்தார். அதன்படி ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியிடமும் பள்ளி ஆசிரியர்களிடமும் முறையாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் புஷ்பவதி மீது 17 பி பிரிவின் கீழ் துறை ரீதியான ஒழுங்கு நட வடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ஆனம்பாக்கம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதியை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

;