tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்  

தமிழகத்தில் ஜூன் 26ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் காலியாக இருந்த 626 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, ஜூன் 26ஆம் தேதி நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in or www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.