சென்னை,பிப்.7- திமுக தேர்தல் அறிக்கை தயாரிக் கும் கனிமொழி எம்.பி. தலைமை யிலான குழுவினர் கடந்த 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் சென்று தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகின்றனர்.
இந்த குழு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்.8 தஞ்சை - திருவாரூர், நாகை-திருவாரூர், திருச்சி - புதுக் கோட்டை மாவட்டங்களின் நிர்வாகி களை சந்திப்பதாக இருந்தது.
ஆனால் இந்த கூட்டம் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 9 ஆம் தேதி சேலத்துக்கு பதில் ஓசூர் செல் கிறார்கள். 10 ஆம் தேதி கோவை, திருப்பூருக்கும், 11 ஆம் தேதி சேலம் செல்லும் வகையில் சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17 ஆம் தேதி விழுப்புரம், 18 ஆம் தேதி வேலூர், ஆரணிக்கு செல்லும் இந்த குழுவினர் 21, 22, 23-ந் தேதிகளில் சென்னையில் பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரை களை கேட்க உள்ளனர்.