tamilnadu

6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன.2 - தமிழ்நாட்டில் 6 நாட்கள் மழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  வடக்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது.

எனவே, ஜன.3 அன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு  இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்தில்  வாய்ப்புள்ளது. அதேபோல், ஜன. 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன. 6 முதல் 8 வரைக்கும் தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.