மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு
மதுரை, நவ.3- மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு வெளியான அறிவிப்பின்படி, நவ.4-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.1-ஆம் தேதி முதல் நவ.3-ஆம் தேதி பெய்த மழை நிலவரம்: (அடைப்புக்குறிக்குள் உள்ளவை இயல்பாகப் பெய்ய வேண்டிய மழை மதுரை- 171.5 (195.2), சிவகங்கை-120.4 (202.8), இராமநாதபுரம்-144.0 (215.5), தேனி-205.2 (189.6), விருதுநகர் 177.3 (193.1), திண்டுக்கல்- 137.2 (217.4).
மின்வாரியத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிர்ப்பு
சிவகங்கை/இராமநாதபுரம், நவ.3- தமிழ்நாடு மின் வாரியத்தை மூன்றாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இராமநாதபுரம், சிவகங்கையில் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இ-டென்டர் முறையை ரத்துச் செய்ய வேண்டும் .மின் வாரிய காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் உமாநாத், ஒய்வு பெற்றோர் சங்க நிர்வாகி வெங்கடசுப்பிரமணியன், வீரமாணிக்கம், சுப்பிரமணியன், நீலகண்டன், ராஜ்குமார், மகாராஜன், அசோக், ராஜமாணிக்கம், ரகுநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ரயிலிருந்து விழுந்தவர் பலி
காரைக்குடி, நவ.3- காரைக்குடி சட்டக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தவர் சரவணன் (37). இவர் ரயிலிருந்து தவறி விழுந்து பலியானர். இவர் கனராவங்கியின் காரைக்குடி கிளையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேலாளர் மாரியப்பனின் மகன் ஆவார். சரவணனின் இறுதி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்புசாமி, தாலுகா செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மூல வைகை நீர்பிடிப்புப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை
கடமலைக்குண்டு, நவ.3- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வியாழன் இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதன்காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை மூலவைகையாற்றில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. ஆற்றின் இரண்டு புறமும் உள்ள கரைகளையும் மூழ்கியவாறு செந்நிறத்தில் காட்டாற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு: திருநங்கைகள் கோரிக்கை
தேனி, நவ.3- அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி தரவேண்டும் என தேனி ஆட்சியரிடம் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர் .வி.ஷஜீவனா, தலைமையில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதில், 40 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத நபர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம்-6), நீக்கல் (படிவம்-7), திருத்தம் (படிவம்-8) தொடர்பான படிவங்கள் வழங்கப்பட்டது. கல்விக் கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
மயிலாடும்பாறை அருகே தரைப் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
கடமலைக்குண்டு, நவ.3- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை-பொன்னன் படுகை இடையே சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத் தால் தலைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக் கப்பட்டிருந்த இரண்டு வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது. மழை பெய்யும் நேரங்களில் நீர் வெளியேற முடியாமல் தரைப்பாலம் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். அதுபோன்ற நேரங்களில் தரைப்பாலத்தை கடந்து செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தரைப்பாலத்தில் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னன் படுகை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தற்போது தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்க ளில் விபத்துகள் நிகழ்கிறது. அதிகாரிகள் தரைப் பாலத்தை சீரமைக்க வேண்டும். அல்லது அதே இடத்தில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டி களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை
தேனி, நவ.3- தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வெள்ளபெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வியாழக்கிழமை இரவு, வெள்ளிக்கிழமை பகல் நேரங்களில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து இருந்தது. கும்பக்கரை அருவியில் கொடைக்கானல் மலை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகை அணை யின் நீர்மட்டம் தற்போது 64.82அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 653 கன அடி. மதுரை மாவட்ட குடிநீருக்கு 69 கன அடி திறக்கப்படுகிறது. முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் 124.60 அடி.நீர்வரத்து 1667 கன அடி. 511 கன அடி திறப்படுகிறது . சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியை தாண்டியது. அணையின் நீர்மட்டம் 126.47 அடி. அணைக்கு வரும் 115.78 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது . .அணைக்கு நீர்வரத்து 34 கன அடி. 100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. சண்முகா நதி அணை நீர்மட்டம் 41.90 அடி. நீர்வரத்து எட்டு கன அடி
விருதுநகர்: அரசுப் பள்ளி மேற்கூரை சேதம் மாணவர்கள் அவதி
விருதுநகர், நவ.3- விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேற்கூரை சேதமாகி பள்ளிக் கட்டிடம் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே உள்ளது எரிச்சநத்தம் கிராமம். இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், எரிச்சநத்தம், நடையனேரி, தாழிக்குளத்துப்பட்டி, இ. புதுப்பட்டி, அம்பேத்கர் காலனி உள்ளிட்ட கிராமங்க ளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக் கட்டிடம் 1965- ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் ஆகியதால், மேற்கூரை ஓடுகள் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ளது. இதனால், மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழை நீர் விழுகிறது. பள்ளியின் மேற்கூரையை கான்கிரீட்டாக மாற்ற வேண்டும். பள்ளியில் உள்ள பழுதுகளை உடனடி யாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வழக்கம் போல வகுப்பறைகளுக்குள் தண்ணீர் விழுவதால் மாணவர்களின் புத்தகப் பைகள் நனைகின்றன. இதனால் அருகே உள்ள வேறு கட்டிடத்திற்கு வகுப்பறையை மாற்றி மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் உள்ளது. மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கட்டிடத்தை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.