tamilnadu

img

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை:
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட் டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறப் பட்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.