அதிமுக பிரமுகர் -அதிகாரிகளிடம் விசாரணை
திண்டுக்கல், மே 19-திண்டுக்கல் அருகே சாணார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சொசைட்டியில் தங்க முலாம் பூசப்பட்டபோலி நகைகளை வைத்து ரூ.70 லட்சம்வரை மோசடி செய்தது தொடர்பாகஅதிமுக பிரமுகரிடம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாணார்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சொசைட்டியின் தலைவராக ராஜசேகர் என்பவர் உள்ளார். இந்த சொசைட்டியில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குகிறார்களோ இல்லையோ நகைக்கடன் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இந்த பகுதியில் உள்ள முன்னாள் பால் சொசைட்டி தலைவரும் அதிமுக பிரமுகருமான சேகர் என்பவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர்பவானிகணேசன் என்பவரது பெயரில்தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து ரூ.70 லட்சம் வரை மோசடியாக பணம் பெற்றதாக தெரிகிறது. நத்தம் கூட்டுறவு சங்க கள ஆய்வாளர் மணிகண்டன் வியாழக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்பவானிகணேசன் பெயரில் அதிமுகபிரமுகர் சேகர் நகைகளை அடகு வைக்ககொண்டு வந்தார்.அந்த நகைகளை ஆய்வு மேற்கொண்ட மணிகண்டன் சந்தேகமடைந்தார். இதனையடுத்து ஏற்கனவே அவர் வைத்த நகைகளையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் அடகு வைத்தஅனைத்து நகைகளும் போலியானவை என்று தெரியவந்தது. இந்த போலி நகைகளை அடகு வைக்க அவருக்கு சொசைட்டியில் உள்ள அதிகாரிகள் உடந்தையாக இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக வியாழனன்று இரவு முழுவதும் தொடர்ந்துஆய்வு நடைபெற்றது. கிட்டத்தட்ட 70 லட்சம்ரூபாய் வரைபோலி நகைகள் மூலம்மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது.இது தொடர்பாக மணிகண்டன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வெள்ளியன்று இணைப்பதிவாளர் அலுவலகத்திலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றதாககூறப்படுகிறது. இதே போல் கடந்தஇரண்டு ஆண்டுகளாக இந்த சொசைட்டியில் தொடர்ந்து போலி நகைகளைவைத்து மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் நிர்வாகரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதே போல போல நகைகளை வைத்துமோசடி நடைபெறுவதாகவும் அது பற்றியும் விசாரணை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசடியாளர்கள் மீது நடவடிக்கை:சிபிஎம்
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் வெள்ளைக்கண்ணன் கூறியதாவது:சாணார்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் கடன் பணத்தை இப்படிபோலி நகைகள் மூலம் முறைகேடு நடத்தியவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க கந்துவட்டிக்கு பணம் பெற்று வேளாண் தொழில் செய்து வருகிறார்கள். போலிநகைகளை வைத்து மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (நநி)