சென்னை,ஆக.29- சர்வதேச வர்த்தக சபையின் கல்விப் பிரிவான ஐசிசி அகாடமி, மைக்ரோபை னான்ஸ் குறித்த சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது. சாட்டின் க்ரெடிட்கேர் நெட்வொர்க்குடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த படிப்பானது இத்துறையில் நுழைபவர்க ளுக்கு நுண் கடன் நிறுவனங்கள் பற்றிய நடை முறை செயல்பாடுகள் பற்றிய கண்ணோட்டத்தையும், இதன் வர்த்தகத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவசிய மான செயல்முறைகள் பற்றிய புரிதலையும் அளிக்கும். இந்த சான்றிதழ் திட்டத்தை தொடங்கிவை த்து பேசிய ஐசிசி அகாடமியின் நிர்வாக இயக்குநரான டானியல் காக் கடந்த 40 ஆண்டுகளில் நுண்கடன் நிறுவனங்கள் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. உலகில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள், 1 கோடியே 60லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறது என்றார்.