ரயில் நிலையங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து டிஆர்டியு சார்பில் வெள்ளியன்று (ஜூலை 5) சென்னை கோட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் வி.ஹரிலால் தலைமை தாங்கினார். சென்னை கோட்டச் செயலாளர் பாபு வரவேற்றார். செயல் தலைவர் ஏ. ஜானகிராமன், மூத்த தலைவர் ஆர்.இளங்கோவன், வொர்க் ஷாப் டிவிஷன் செயலாளர் சிவக்குமார், துணை பொதுச் செயலாளர்கள் என்.அபிமன்யு, தமிழரசி, ராஜ்குமார், ஜிராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.