மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பயணிகள் ரயில் சேவையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து சென்னை செட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் தட்சின் ரயில்வே எம்பிளாயிஸ் யுனியன் (டி.ஆர்.இ.யு) சார்பில் உதவி பொதுச் செயலாளர் ஷகிலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், அபிமன்யூ, சென்னை டிவிஷன் செயலாளர் பாபு, ஒர்க்ஷாப் செயலாளர் சிவக்குமார், கூடுதல் டிவிஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரயில்வே தனியார்மயமானால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பேசினார்கள். இதில் ஏராளமான தொழிலாளர்களும், ரயில் பயணிகளும் கலந்து கொண்டனர்.