tamilnadu

வெள்ள பாதிப்பு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை

சென்னை, டிச.13- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்க ளில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு குறித்து ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்க ளில் மிக்ஜம் புயல் மழையால் பாதி க்கப்பட்ட பகுதிகளை பார்வையிடு வதற்காக ஒன்றிய குழுவினர் சென்னை  வந்துள்ளனர். தேசிய பேரிடர் மேலா ண்மை ஆணையத்தின் (என்டிஎம்ஏ) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலை மையில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திமான்சிங், வேளா ண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குநர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் விஜயகுமார், நிதித்துறையின் ரங்கநாத் ஆடம், மின்சாரத் துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இரண்டு குழுவாக பிரிந்து சென்று இரண்டாவது நாளாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

இரண்டாவது நாளாக...

சிவ்கர், விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவு நீரகற்று நிலையம் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து வில்லிவாக்கம் அம்பேத்கர் நகர், சிட்கோ நகர், அம்பத்தூர் எஸ்டேட் சிட்கோ தொழிற் பேட்டை பகுதிகளை பார்வையிட்ட னர்.

அதன் பின்னர் பாடி, கொரட்டூர் பகுதிகளுக்கு சென்று வெள்ள சேத  பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கொரட்டூரில் மழை நீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டனர். வடக்கு அவென்யூ ரோடு, ஏரிக்கரை  பகுதிகளுக்கும் சென்று பார்வை யிட்டனர்.

இதே போல் காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ள சேதங்களை மற்றொரு குழுவில் இடம் பெற்றிருந்த குணால் சத்யார்த்தி, திமான் சிங், ரங்கநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் தாம்பரம் மாநக ராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், நன்மங்கலம் ஏரி, சமத்துவ பெரியார் நகர், மூவேந்தர் நகர், பாரதியார் நகர்,  குட்வில் நகர் பகுதிகளை பார்வை யிட்டனர்.

இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிய வரதராஜபுரம்-ராயப்பா நகர், மகா லட்சுமி நகர் பாலம், தாம்பரம்-முடிச்சூர் திருபெரும்புதூர் சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

பிற்பகலில் குன்றத்தூர் வேல் நகர், பிரிதிவி நகர், செம்பரம்பாக்கம் அமரம் பேடு, மாதா கல்லூரி அருகே உள்ள பகுதிகள், பூந்தமல்லி நசரத்பேட்டை, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதி, திருவேற்காடு, ஐசிஎப் காலனி, நூம்பல், முகலிவாக்கம் திருவள்ளூர் நகர், மணப்பாக்கம் முகலிவாக்கம் சாலை, பெல்நகர் காவ்யா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ ஆகிய பகுதி களுக்கும் சென்று பார்வையிட்டனர்.

இதே போல் மற்றொரு குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி, சோழவரம் ஏரி, ஆவடி வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, பொன்னேரி, திருவேற்காடு, பஞ்செட்டி சாலை, சுப்பா ரெட்டி பாளையம், அத்திப்பட்டு, புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், அத்திப்பட்டு அனு பம்பட்டு, கொசஸ்தலை ஆறு பகுதி கள், சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம், ஆரணியாறு, பழவேற்காடு ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

முதலமைச்சருடன் சந்திப்பு
பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை டிச.14 வியாழக்கிழமை சந்திக்கின்றனர். அதன் பின்னர் தில்லி புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து ஒரு வாரத்தில் ஒன்றிய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி விஜய குமார் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.