tamilnadu

img

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின!

சென்னை, மே 13 - மத்திய இடைநிலைக் கல்வி வாரி யம் எனும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று (மே 13) வெளியாகின. 

மத்திய இடைநிலைக் கல்வி வாரி யத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12ஆம்  வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 அன்று  துவங்கியது. இதில் 12- ஆம் வகுப்பு  தேர்வுகள் ஏப்ரல் 2 அன்று முடிவ டைந்தன.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுத நாடு முழுவதும், 16.33 லட்சம் மாண வர்கள் விண்ணப்பித்திருந்த நிலை யில், 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 மாண வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இந் நிலையில், இவர்களுக்கான தேர்வு முடிவுகள், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மே 13 திங்களன்று காலை யில் இணையத்தில் திடீரென்று வெளி யானது.

இதில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 420  மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி விழுக்காடு 97.98 ஆகும். மேலும், கடந்த 2023 கல்வி ஆண்டை விட  0.65 விழுக்காடு அதிகம்.

சென்னை மண்டலம்
அகில இந்திய அளவில் திருவனந்த புரம் மண்டலம் 99.91 விழுக்காடு தேர்ச்சி  விகிதத்தை பெற்று முதலிடத்தையும், 99.04 விழுக்காடு தேர்ச்சி பெற்றி ருக்கும் விஜயவாடா இரண்டாவது இடத்  தையும் 98.47 விழுக்காடு தேர்ச்சி பெற் றுள்ள சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் www. cbse.gov.in மற்றும் www.cbseresults. nic.in என்ற இணையத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.