சென்னை, பிப்.3- மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக-இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை (பிப்.3) நடைபெற்றது. பொருளா ளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா ஆகியோர் அடங்கிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்
. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., துணைச் செயலாளர் வீரபாண்டி யன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனி சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் சிபிஐ போட்டி யிட விரும்பும் பட்டியலை திமுக குழுவிடம் வழங்கியதாக கூறப்படு கிறது. கடந்த முறை திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.