tamilnadu

img

காவிரி நதிநீர் விவகாரம்: தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம், வினாக்கள் - விடைகள் நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தப்பட்டது. பின்னர், இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.