tamilnadu

img

விசாரணை கைதிகளை விசாரிக்கும் போது எச்சரிக்கை தேவை: டிஜிபி சுற்றறிக்கை

சென்னை:
விசாரணைக் காவலில் கைதிகளை விசாரிக்கும் போது காவல்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் தந்தை மகன், மரணம் மற்றும் காவலர் பலருக்கு கொரோனா பரவி வரும்  நிலையில், தமிழக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், விசாரணைக் காவலில் கைதிகளை விசாரிக்கும்போது காவல்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரின் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனி கட்டிடம் ஏற்படுத்தவேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

;