நேரக்கட்டுப்பாட்டை மீறிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை, ஜூன் 20- சென்னை பெரம்பூரில் லாரி ஏறி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார். சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறியதாக 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் அபராதம் விதித்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 12 மணிக்கு மேல் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.
மாணவியை கடித்து குதறிய நாய்
சென்னை, ஜூன் 20- திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை குதிரத்தலி மக்கான் தெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் சென்னை மாநகராட்சியின் 129வது வார்டு சுகாதார பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் இவரது மகள், கடந்த 13 ஆம் தேதி திருவல்லிக்கேணி வெங்கடசாமி தெருவை சேர்ந்த லட்சுமி (42) என்பவரின் வளர்ப்பு நாய் கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறியது. இதனைக் கண்ட பொதுமக்கள் சிறுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தை தர்மன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வளர்ப்பு நாயின் உரிமையாளர் லட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர்.
திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் தொல்.திருமாவளனுக்கு ஆதர வாக அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் பேருந்து நிறுத்தம் அருகில்பொதுக்கூட்டம் நடத்தப்பட் டது. இந்த கூட்டத்தில் விதிகளை மீறி, 4 நிமிடங்கள் கூடுதலாக பிரச் சாரம் செய்ததாக வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, திருமா தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தர விட்டார்.