tamilnadu

மருத்துவக் கலந்தாய்வில் புதிய கல்லூரிகளையும் சேர்க்க கோரி வழக்கு....

சென்னை:
நடப்பாண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வில், புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்த பொதுநல மனுவில், புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.ஆனால், கலந்தாய்வு பட்டியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை என்றும், நிவர் புயல் காரணமாக தற்போது மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ள சூழலில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.