முன்னாள் ராணுவ வீரர் மற்றும் தற்போதைய பாஜக நிர்வாகி பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராணுவ வீரர்கள் குண்டுவைப்பதில், சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள் ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை எங்களை செய்ய வைத்துவிடாதிர்கள் என தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன் என சென்னையில் நடந்த பாஜக ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை மிரட்டுவது போல் அவர் பேசியது சர்ச்சையானதையடுத்து தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.