tamilnadu

img

ஊரடங்கு ரத்து கோரிய வழக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை கோவிலம்பாக் கத்தை சேர்ந்த  தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் மார்ச் 24ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, படிப்படியாக நீட்டித்து மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டிருந்தார்.பலர் வருவாய் இழந்துள்ள நிலையில், தன்னை போல குறைவான வருவாய் ஈட்டுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளதாக வேதனை தெரிவித்திருந்தார்.சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்த நிலையில், தென் கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே வைரஸ் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அது நம்முடன் தான் இருக்கும் என்பதால், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண் டும், முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசு விதித் துள்ள நிபந்தனைகளை கடை பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.அதனால் ஊரடங்கை நீட்டித்து மார்ச் 17ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

;