tamilnadu

கார் மோதி பெண் பலி

திருப்போரூர்,ஏப்.30-திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (50) இவர் சாலையோரத்தில் காய்கறிகடை வைத்துள்ளார். திங்களன்று இரவுகாய்கறி கடை வியாபாரம்முடிந்து, காய்கறிமூட்டைகளை எதிரில் உள்ள ஒருகடையில் வைப்பதற்காக சாலையை கடக்க முற்பட்டார். அப்போது வேகமாக திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி எறியப்பட்ட குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்துதிருப்போரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;