tamilnadu

கன்னிமாரா நூலகம் மார்ச் 31 வரை மூடல்

சென்னை, மார்ச் 21- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கன்னிமாரா நூலகம் மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பு நூல கத்தில் உள்ள வெளிப்புற வாயில் கதவில் தொங்க விடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் கன்னிமாரா நூலகம் உள்  ளது. இது 1896ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5ஆம் தேதி  பொது மக்கள் பயன்பாட்டுக் காக திறக்கப்பட்டது. இது  ஐக்கிய நாடுகளின் களஞ்சிய  நூலகங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான நூலகங்களின் முதன்மை யானதாகவும் திகழ்கிறது. இதற்கு அடிக்கல் நாட்டிய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபுவின் பெயரே இந்த நூலகத்திற்கு சூட்டப்பட்டது. இந்த நூலகத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளன. ஆண்டு  தோறும் லட்சக்கணக்கா னோர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குடிமைப்பணி தேர்வுக்கு தயாராவோருக்கு இந்த  நூலகம் மிகவும் பயனுள்ள தாகவும் இருக்கிறது. இந்த  நூலகம் தீபாவளி, பொங்கல்  மற்றும் 3 தேசிய விடுமுறை தினங்களுக்கு மட்டுமே இயங்காது. இது தவிர ஆண்டு முழுவதும் விடு முறை இல்லாமல் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பர வலை தடுக்க கன்னிமாரா நூலகம் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நூல கத்தில் உள்ள வெளிப்புற வாயில் கதவில் தொங்க விடப்பட்டுள்ளது. அதில் ‘கொரோனா பாதிப்பில் இருந்து பொது மக்கள் மற்றும் வாசகர்களை காக் கும் பொருட்டு மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும் மார்ச் 20ஆம் தேதி முதல்  மூடப்பட்டுள்ளது. முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமி வெளியிட்டுள்ள அறி விப்பில், ‘கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ கத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்கள் மார்ச்  31ஆம் தேதி வரை மூட  வேண்டும் என்று உத்தர விட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.