tamilnadu

img

கஞ்சா வியாபார சமூக விரோத கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் படுகொலை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும்சோமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த தொலைக்காட்சி செய்தியாளர் திரு மோசஸ் தொடர்ந்து கொலைமிரட்டலுக்கு உள்ளாகி வந்துள்ளார். இருந்தபோதிலும் துணிச்சலாக செயல்பட்டு வந்துள்ளார் .

தனக்கு இருக்கும் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் குறித்து சோமங்கலம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளார். ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க
வில்லை. இந்த சமூக விரோதிகள் இவரை கொல்ல பலமுறை முயற்சித்தும் தப்பித்த நிலையில் ஞாயிறு இரவு புது நெல்லூரில் உள்ள அவரதுவீட்டிற்கே கொலையாளிகள் சென்று அவரைவீட்டிற்கு வெளியே வரவழைத்து வெட்டி சாய்த்து உள்ளனர். செய்தியாளர் மோசஸ் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்தகொடூர நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.மோசஸ் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுத்திருந்தால் அவரை பாதுகாத்து இருக்க முடியும். இந்த சம்பவத்தில் சமூகவிரோதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் ரகசிய கூட்டு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகவும் சீர்கேடு அடைந் துள்ளது என்பதற்கு இந்த கொலைச்சம்பவமே எடுத்துக்காட்டு.

தமிழக காவல்துறை உடனடியாக இந்தகொலை சம்பவம் குறித்து உரியண விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், தமிழகத்திலுள்ள பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது. கொலையுண்ட பத்திரிகையாளர் மோசஸ் குடும்பத்திற்குரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.